
வா அன்பே
வசந்தமே வந்ததே !
நீ வருகையிலே ..
ஒவ்வொரு கணமும்
பிரமிப்பாய் எனக்கு !
பேசத் தோணுதே
கவிதையாய்
கனவெல்லாம்
நீயே வந்தாய் ...
நீ விடும் மூச்சு
தென்றலாய் என்னுள்ளே
ரசிக்க ரசிக்க
தேனாய் உன் வார்த்தை
ஐ லவ் யூ ..
வெளிச்சம் பரவியது
பகலிலும் ...
நிலவொளியாய்
உந்தன் நெற்றிப்பொட்டு
கோடையும் குளிரும்
பாதிக்க வில்லையே
நான் உன்னை
நினைக்கையிலே ..
இனி வரும் காலம்
உன்னை மறவாத
நெஞ்சத்தை தாவென
கேட்பேன் இறைவனிடம்
அன்பே என் அன்பே
மறுபடியும்
சொல்வாயா
ஐ லவ் யூ ....
5 comments:
சோதனை மறுமொழி
என்ன பொம்மன் ஆளையே காணோம்.
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
கல்யாண ஏக்கம் கவிதையில தெரியிது.
இங்கோயும் கவுஜையா???? இதை நான் எதிர்பார்க்கலை...
உங்களுக்கு பதில்போட விட்டுப்போச்சுத்தல... கோச்சுக்காதீங்க... அதான் பாலாவோராவே ஆயிட்டேன்... ஓழுங்கா மொக்கையை தவறாம போடனும்... நமது மொக்கை சேவை தழைத்தோங்குக....
கவிதை ரொம்ப அருமை நல்லா எழுதியிருக்கீங்க .
தொடர்ந்து எழுதுங்க .
செல்லம்... ஐ லவ் யூ ம்மா.... :))
Post a Comment